மறுக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

காலம் காலமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்றில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுபார்வை செய்வதன் மூலமாக அதில் திருத்தங்களை செய்வதும் அல்லது முற்றிலுமாக மாற்றி எழுதுவதும் வரலாற்று ஆராய்ச்சிப் படிப்பின் மிக முக்கியமான பகுதிகளாகும். இதுவரையில் கிடைக்கப்பெறாத புதிய ஆவணங்களை கண்டறிவதன் மூலமாகவும் மிகத் துல்லியமான விபரங்களைச் சேகரிப்பதன் மூலமாகவும் மட்டுமே வரலாற்றில் மீள்பார்வை செய்ய முடியும். வரலாற்று ஆசிரியர் டேவிட் இர்விங் கூற்றுப்படி, “வரலாறு என்பது தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மரமாகும். ஒவ்வொரு புதிதாக கிடைக்கும் ஆவணங்களின் மூலமாகவும் வரலாறு மாறிக் கொண்டே இருக்கும்”. உதாரணமாக சமீபத்தில் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உலக வரைபடத்தின் மூலமாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே சீனர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வருகிறது.
ஆனால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி ஜெர்மனியால் ஐம்பது லட்சம் ய+தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை மறுத்துப் பேசுவது பல ஐரோப்பிய நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. 1938 முதல் 1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை விஷவாயு நிரப்பப்பட்ட அறைகளில் அடைக்கப்பட்டு லட்சக்கணக்காக ய+தர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளைச் செய்வதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி செய்யப்படாத நிறைய அறைகள் கட்டப்பட்டு அதில் சிறைப்பிடிக்கப்பட்ட ய+தர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகளின் கதவுகளில் சிறிய துவாரமிடப்பட்டிருந்தது. அதன் வழியாகவே விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு அனைவரும் மொத்தம் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளின் கோரமுகம் 1941ல் தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. சிறைகளில் இருந்து தப்பிய சிலரது தெளிவான விளக்கங்களின் மூலமாகவே இந்த வரலாற்று நிகழ்வின் உண்மைத் தன்மை மேலும் அதிகரித்தது. போர் முடியும் தருவாயில் ஜெர்மனியின் சில இனப்படுகொலை முகாம்களுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் படைகள் அங்கு ஆயிரக்கணக்கான எரிக்கப்படாத பிணங்களையும், உணவில்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளித்த பலரையும் மீட்டது. அங்கு மீட்கப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இந்த பேரினப் படுகொலைகளுக்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக உள்ளது. ஆன்ஃபிராங் என்ற ய+த இளம் பெண்; தனது டைரியில், அவரும் அவரது குடும்பமும் நாசிக்களால் பட்ட இன்னல்களை விவரிக்கிறார். இந்த டைரி தான் நாஸி ஜெர்மனியின் கோரப்படுகொலைகளுக்கு மிகத் தெளிவான மற்றுமொரு ஆதாரமாகும். இந்தப் படுகொலைகள் எல்லாமே ஹிட்லரின் தலைமையில் அவருக்கு தெரிந்து, அவரது உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றில் விளக்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்திலிருந்த சில வரலாற்று ஆசிரியர்களும் சில தலைவர்களும் ஐம்பது லட்சம் பேர் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவது கட்டுக்கதை என கூறி வருகின்றனர். இவர்கள் ய+தப்படுகொலை மறுதலிப்பாளர்கள் என்று மற்றவர்களாhல் அழைக்கப்பட்டாலும்; அவர்கள் தங்களை ய+தப்படுகொலை மீள்பார்வையாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். 1979ல் வரலாற்று மீள்பார்வை கல்விமையம் உருவாக்கப்பட்டதிலிருந்து இவர்களது கருத்துக்கு ஆதரவு பெருகி வந்தது. தங்கள் கருத்துக்கு ஆதரவாக நிறைய வாதங்களை எடுத்து வைக்கும் இவர்கள் கருத்துப்படி விஷ வாயு அறைகள் என்ற ஒன்று முற்றிலும் புனையப்பட்ட கதையாகும். நாஸிக்கள் ஐம்பது முதல் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்தனர் என்பது பொறுப்பற்ற வாதம் என்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யா, இங்கிலாந்து, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று விட்டார்கள் என்பதும் இவர்கள் கருத்து. ய+தப்படுகொலை நடந்தது என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் புகைப்படங்களில் பல இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் எடுக்கப்பட்டது என்பது படச்சுருள்களை ஆய்வு செய்யும் போது தெரிய வருகிறது என்றும் கூறுகிறார்கள். அப்படங்கள் போலியானவை என்பது மட்டுமில்லாமல் அவற்றில் பசி பட்டினியால் எலும்பும் தோலுமாய் உள்ளவர்களைக் காண முடிகிறதே தவிர விஷவாயு செலுத்தப்பட்டு இறந்தவர்களாகவோ அல்லது அதற்கு ஆதாரமாகவோ ஒரு புகைப்படமும் இல்லை. மேலும் ஹிட்லர் கையெழுத்திட்ட எந்த ஆவணமும் இதுவரையில் யாராலும் கைப்பற்றப்படவில்லை. இதன்மூலம் ஹிட்லரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அவரது சகாக்கள் செய்த கொடுமைகள்தான் இந்த இனப் படுகொலைகள் என்று வாதிடுபவர்களும் உண்டு. நாசிக்கள் ஐம்பது லட்சம் பேரைக் கொன்றிருந்தால், அந்த உடல்களை எரிப்பதற்கு மிக அதிக அளவில் எரிசக்தி தேவைப்பட்டிருக்கும், அந்த அளவு எரிசக்தி ஜெர்மனியில் அப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. ய+தர்கள் மீது ஒரு பச்சாபத்தை உருவாக்கி அதன் மூலமாக பாலஸ்தீனத்தில் ய+தர்களுக்காக தனி நாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது என்றும் இவர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் மறுக்கப்படுவது இது முதன் முறையல்ல. மாவோவின் அரசால் சீனாவில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரில் மாண்டவர்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஆதாரங்களோடு நிரூபிக்கும் வரை இந்நிகழ்வு பல காலமாக மறுக்கப்பட்டு வந்தது. ஆர்மீனிய இனப் படுகொலைகளுக்கு காரணமான துருக்கி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படுகொலைகளை மறைத்து வந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே அந்நாடு தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறது. இதே போல்; போஸ்னிய செர்பியப் இனப்படுகொலைகளும், ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியப் பழங்குடி மக்களின் படுகொலைகளும் அந்தந்த தேசங்களின் அரசுகளால் முதலில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் ஆதாரங்களில் அடிப்படையில் அவை நிரூபிக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் அதிபர் முகமது அகமதின்ஜத் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ய+தப் படுகொலைகள், ய+தர்களுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சாரம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அரசுகளே இனப்படுகொலைகளை மறைக்கும் நிலைகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதையும் யூதப் படுகொலைகளை மறுதலிப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாஸி ஜெர்மனியால் நடத்தப்பட்ட ய+தப் படுகொலைகள் உலகளாவிய ஒரு மோசமான நிகழ்வாக இருப்பதால் அதனை மறுதலிப்பது என்பது பெரும்பாலும் குற்றமாகவே கருதப்படுகிறது. டேவிட் இர்விங் 1970களில் வெளியிட்ட ‘ஹிட்லரின் போர்” என்ற புத்தகத்தில் ஹிட்லருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சில கருத்துக்கள் பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியது. 1989ல் ஆஸ்திரியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய டேவிட் இர்விங், ஹிட்லருக்குத் தெரியாமலேயேதான் ய+தப்படுகொலைகள் நடைபெற்றது எனவும், ஹிட்லர் மிகவும் புத்திசாலியானவர், ய+தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எனவும், யூதப்படுகொலைகள் வெறும் கட்டுக் கதை எனவும் பேசினார். இவ்வாறு நாஸிக்களின் யூதப் படுகொலைகளை மறுத்துப் பேசுவது ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற 11 நாடுகளின்; சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அப்போதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி 20ம் தேதி ஆஸ்திரியா சென்ற அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1990க்குப் பிறகு யூதப்படுகொலைகளை மறுதலித்து தான் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்று தற்போது கூறியுள்ள இர்விங், நாஸி ஜெர்மனியால் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது உண்மைதான் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முகமது நபி கார்ட்டூன் விவகாரத்தின் பேச்சுரிமை பற்றி உலகளாவிய விவாதம் நடைபெற்று வரும் வேளையில் இப்பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை உலகமே கவனித்து வருகிறது.

மறுக்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்

காலம் காலமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரலாற்றில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுபார்வை செய்வதன் மூலமாக அதில் திருத்தங்களை செய்வதும் அல்லது முற்றிலுமாக மாற்றி எழுதுவதும் வரலாற்று ஆராய்ச்சிப் படிப்பின் மிக முக்கியமான பகுதிகளாகும். இதுவரையில் கிடைக்கப்பெறாத புதிய ஆவணங்களை கண்டறிவதன் மூலமாகவும் மிகத் துல்லியமான விபரங்களைச் சேகரிப்பதன் மூலமாகவும் மட்டுமே வரலாற்றில் மீள்பார்வை செய்ய முடியும். வரலாற்று ஆசிரியர் டேவிட் இர்விங் கூற்றுப்படி, “வரலாறு என்பது தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மரமாகும். ஒவ்வொரு புதிதாக கிடைக்கும் ஆவணங்களின் மூலமாகவும் வரலாறு மாறிக் கொண்டே இருக்கும்”. உதாரணமாக சமீபத்தில் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட ஓர் உலக வரைபடத்தின் மூலமாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே சீனர்கள் அமெரிக்க கண்டத்தை கண்டறிந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை தெரிய வருகிறது.
ஆனால், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி ஜெர்மனியால் ஐம்பது லட்சம் ய+தர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற வரலாற்று நிகழ்வை மறுத்துப் பேசுவது பல ஐரோப்பிய நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. 1938 முதல் 1945ல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை விஷவாயு நிரப்பப்பட்ட அறைகளில் அடைக்கப்பட்டு லட்சக்கணக்காக ய+தர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளைச் செய்வதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு ஜன்னல்கள் மற்றும் காற்றோட்ட வசதி செய்யப்படாத நிறைய அறைகள் கட்டப்பட்டு அதில் சிறைப்பிடிக்கப்பட்ட ய+தர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகளின் கதவுகளில் சிறிய துவாரமிடப்பட்டிருந்தது. அதன் வழியாகவே விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு அனைவரும் மொத்தம் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளின் கோரமுகம் 1941ல் தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. சிறைகளில் இருந்து தப்பிய சிலரது தெளிவான விளக்கங்களின் மூலமாகவே இந்த வரலாற்று நிகழ்வின் உண்மைத் தன்மை மேலும் அதிகரித்தது. போர் முடியும் தருவாயில் ஜெர்மனியின் சில இனப்படுகொலை முகாம்களுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் படைகள் அங்கு ஆயிரக்கணக்கான எரிக்கப்படாத பிணங்களையும், உணவில்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளித்த பலரையும் மீட்டது. அங்கு மீட்கப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இந்த பேரினப் படுகொலைகளுக்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக உள்ளது. ஆன்ஃபிராங் என்ற ய+த இளம் பெண்; தனது டைரியில், அவரும் அவரது குடும்பமும் நாசிக்களால் பட்ட இன்னல்களை விவரிக்கிறார். இந்த டைரி தான் நாஸி ஜெர்மனியின் கோரப்படுகொலைகளுக்கு மிகத் தெளிவான மற்றுமொரு ஆதாரமாகும். இந்தப் படுகொலைகள் எல்லாமே ஹிட்லரின் தலைமையில் அவருக்கு தெரிந்து, அவரது உத்தரவின் பேரில்தான் நடைபெற்றது என ஆவணங்களின் அடிப்படையில் வரலாற்றில் விளக்கப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்திலிருந்த சில வரலாற்று ஆசிரியர்களும் சில தலைவர்களும் ஐம்பது லட்சம் பேர் நாஸிக்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவது கட்டுக்கதை என கூறி வருகின்றனர். இவர்கள் ய+தப்படுகொலை மறுதலிப்பாளர்கள் என்று மற்றவர்களாhல் அழைக்கப்பட்டாலும்; அவர்கள் தங்களை ய+தப்படுகொலை மீள்பார்வையாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். 1979ல் வரலாற்று மீள்பார்வை கல்விமையம் உருவாக்கப்பட்டதிலிருந்து இவர்களது கருத்துக்கு ஆதரவு பெருகி வந்தது. தங்கள் கருத்துக்கு ஆதரவாக நிறைய வாதங்களை எடுத்து வைக்கும் இவர்கள் கருத்துப்படி விஷ வாயு அறைகள் என்ற ஒன்று முற்றிலும் புனையப்பட்ட கதையாகும். நாஸிக்கள் ஐம்பது முதல் அறுபது லட்சம் யூதர்களைக் கொலை செய்தனர் என்பது பொறுப்பற்ற வாதம் என்பதோடு அவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யா, இங்கிலாந்து, பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று விட்டார்கள் என்பதும் இவர்கள் கருத்து. ய+தப்படுகொலை நடந்தது என்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் புகைப்படங்களில் பல இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் எடுக்கப்பட்டது என்பது படச்சுருள்களை ஆய்வு செய்யும் போது தெரிய வருகிறது என்றும் கூறுகிறார்கள். அப்படங்கள் போலியானவை என்பது மட்டுமில்லாமல் அவற்றில் பசி பட்டினியால் எலும்பும் தோலுமாய் உள்ளவர்களைக் காண முடிகிறதே தவிர விஷவாயு செலுத்தப்பட்டு இறந்தவர்களாகவோ அல்லது அதற்கு ஆதாரமாகவோ ஒரு புகைப்படமும் இல்லை. மேலும் ஹிட்லர் கையெழுத்திட்ட எந்த ஆவணமும் இதுவரையில் யாராலும் கைப்பற்றப்படவில்லை. இதன்மூலம் ஹிட்லரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே அவரது சகாக்கள் செய்த கொடுமைகள்தான் இந்த இனப் படுகொலைகள் என்று வாதிடுபவர்களும் உண்டு. நாசிக்கள் ஐம்பது லட்சம் பேரைக் கொன்றிருந்தால், அந்த உடல்களை எரிப்பதற்கு மிக அதிக அளவில் எரிசக்தி தேவைப்பட்டிருக்கும், அந்த அளவு எரிசக்தி ஜெர்மனியில் அப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. ய+தர்கள் மீது ஒரு பச்சாபத்தை உருவாக்கி அதன் மூலமாக பாலஸ்தீனத்தில் ய+தர்களுக்காக தனி நாட்டை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது என்றும் இவர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் மறுக்கப்படுவது இது முதன் முறையல்ல. மாவோவின் அரசால் சீனாவில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரில் மாண்டவர்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஆதாரங்களோடு நிரூபிக்கும் வரை இந்நிகழ்வு பல காலமாக மறுக்கப்பட்டு வந்தது. ஆர்மீனிய இனப் படுகொலைகளுக்கு காரணமான துருக்கி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படுகொலைகளை மறைத்து வந்தது. தற்போது ஐரோப்பியக் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே அந்நாடு தங்கள் நிலையில் இருந்து இறங்கி வந்திருக்கிறது. இதே போல்; போஸ்னிய செர்பியப் இனப்படுகொலைகளும், ஆஸ்திரேலியாவின் தாஸ்மேனியப் பழங்குடி மக்களின் படுகொலைகளும் அந்தந்த தேசங்களின் அரசுகளால் முதலில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பின்னர் ஆதாரங்களில் அடிப்படையில் அவை நிரூபிக்கப்பட்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈரான் அதிபர் முகமது அகமதின்ஜத் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது, ய+தப் படுகொலைகள், ய+தர்களுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட ஒரு தவறான பிரச்சாரம் எனக் கூறியுள்ளார். இவ்வாறு அரசுகளே இனப்படுகொலைகளை மறைக்கும் நிலைகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதையும் யூதப் படுகொலைகளை மறுதலிப்பவர்கள் தங்களுக்கு ஆதரவாக கூறிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாஸி ஜெர்மனியால் நடத்தப்பட்ட ய+தப் படுகொலைகள் உலகளாவிய ஒரு மோசமான நிகழ்வாக இருப்பதால் அதனை மறுதலிப்பது என்பது பெரும்பாலும் குற்றமாகவே கருதப்படுகிறது. டேவிட் இர்விங் 1970களில் வெளியிட்ட ‘ஹிட்லரின் போர்” என்ற புத்தகத்தில் ஹிட்லருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சில கருத்துக்கள் பல ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சையைக் கிளப்பியது. 1989ல் ஆஸ்திரியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய டேவிட் இர்விங், ஹிட்லருக்குத் தெரியாமலேயேதான் ய+தப்படுகொலைகள் நடைபெற்றது எனவும், ஹிட்லர் மிகவும் புத்திசாலியானவர், ய+தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் எனவும், யூதப்படுகொலைகள் வெறும் கட்டுக் கதை எனவும் பேசினார். இவ்வாறு நாஸிக்களின் யூதப் படுகொலைகளை மறுத்துப் பேசுவது ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற 11 நாடுகளின்; சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அப்போதே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி 20ம் தேதி ஆஸ்திரியா சென்ற அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1990க்குப் பிறகு யூதப்படுகொலைகளை மறுதலித்து தான் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்று தற்போது கூறியுள்ள இர்விங், நாஸி ஜெர்மனியால் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது உண்மைதான் என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் தற்போது தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முகமது நபி கார்ட்டூன் விவகாரத்தின் பேச்சுரிமை பற்றி உலகளாவிய விவாதம் நடைபெற்று வரும் வேளையில் இப்பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை உலகமே கவனித்து வருகிறது.

இடதுசாரிப் பாதையில் லத்தீன் அமெரிக்கா

தற்போது இருக்கும் லத்தீன் அமெரிக்கா முப்பது ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்ததை விட மிகவும் வேறுபட்டதாகும். முன்புபோல் அல்லாமல் தற்போது தேர்தல் நடைமுறைகள் எல்லா நாடுகளிலுமே மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது எந்த ராணுவ அரசுமே பதவியில் இல்லை என்பதுதான் மாற்றத்திற்கான மிக முக்கியமான காரணமாகும். தேர்தல்கள் மிகவும் நடுநிலைமையுடன் நடைபெறுவது மட்டுமன்றி பத்திரிக்கைகள் மிகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் கூட தேர்தலில் வெற்றி பெறுகின்றன என்பதே இந்த மாற்றத்திற்கு சிறந்த சான்றாகும். இங்குள்ள சமுதாயச் சூழலும் முற்றிலுமாக மாறித்தான் போய்விட்டது. நகரமயமாக்கலும், அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சியும், மொபைல்போன்கள், இணையம், டிவி சேனல்கள் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியும் லத்தீன் அமெரிக்காவின் சமூக மாற்றத்திற்கான காரணங்களாகும்.பொதுவுடமை எண்ணம் கொண்ட கம்ய+னிச சித்தாந்தவாதிகள் பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவு பலம் பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு இல்லை.அர்ஜெண்டினா, பிரேசில், வெனிசுலா, உருகுவே போன்ற நாடுகளில் ஏற்கனவே இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளனர். தற்போது பொலிவியாவிலும், சிலியிலும் இடதுசாரி ஆட்சியாளர்கள் தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மெக்ஸிகோவிலும் பெருவிலும் நடக்க இருக்கும் தேர்தலில் கூட இடதுசாரிகளுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணம் 21ம் நூற்றாண்டின் பொதுவுடமைவாதியாக வர்ணிக்கப்படும் வெனிசுலாவின் அதிபர் சாவேஸ் ஆவார். அவர் கிய+பாவின் பிடல் சாஸ்ரோவை விட பல நாடுகளில் மக்களின் செல்வாக்கு பெற்றவராக விளங்குகிறார். பொலிவியாவில் ஈவோ மாரல்ஸ் தலைமையில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றமே பொதுவுடமைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும். அதன் அமெரிக்க நாடுகளிலே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான பொலிவியாவிற்கு பொதுவுடமையின் மூலம் நல்ல வளர்ச்சி ஏற்படும் என கருதப்படுகிறது. இயற்கை எரிவாயு மூலமாக இந்நாடு தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்த வாய்ப்பு உள்ளது. சிலி நாட்டின் முதலாவது பெண் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மிஷல் பேக்லட் 1973ல் நடந்த ராணுவப் புரட்சியால் சித்திரவதை செய்யப்பட்டவர். மிகப்பெரும் போராளியான இவர் பொதுவுடமை தேசமாக சிலியை மாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடையவர். பெரு நாட்டின் பொதுத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பொலிவியாவின் தேர்தல் முடிவுகள் இந்த நாட்டின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும். இங்கு தேர்தல் முடிவுகள் இடதுசாரி கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்ஸிகோவில் மே மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வெனிசுலா அதிபர் சாவேஸ்-ன் பிரசார யுக்திகள் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. கத்தோலிக்க சர்ச்சும், ஏகாதிபத்தியவாதிகளும் இங்கு இடதுசாரிகளுடைய வெற்றியைத் தடுக்க போராடுகின்றனர். மிகவும் நெருக்கமான பந்தயத்தில் இடதுசாரிகள் வெற்றிபெற அதிகமான வாய்ப்பிருக்கிறது. தற்போது லூலா தலைமையில் இடதுசாரி ஆட்சி நடைபெற்று வரும் பிரேசில் அக்டோபர் மாதத்தில் தேர்தலைச் சந்திக்கிறது. லூலாவின் தொழிலாளர் கட்சி பல ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. 2003 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்ற அதிருப்தியும் இக்கட்சி மீது உள்ளது. எனினும் மக்களின் ஆதரவு போதுமான அளவு இருப்பதால் மீண்டுமொரு 4 ஆண்டுகளுக்கு இக்கட்சியே இங்கும் ஆட்சி செய்யக் கூடும். வரும் அக்டோபரில் தேர்தல் நடக்க இருக்கும் ஈக்வடாரில் பணம் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். இடதுசாரியான ஒரு வேட்பாளரே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வெனிசுலாவின் தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதில் சாவேஸ் வாக்காளர்களைச் சந்திக்கிறார். இவருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருப்பதனால் ஏதாவது அதியம் நடந்தாலன்றி இவர் தேர்தலில் தோற்பார் என்பதை கற்பனை கூட செய்யக் முடியாது. மே 2006ல் தேர்தல் நடக்க இருக்கும் கொலம்பியாவில் மட்டுமே வலதுசாரி அதிபர் வர வாய்ப்பிருக்கிறது. இங்கு இடதுசாரிகள் புரட்சியாளர்களாக இருப்பதனால் அவர்களை அடக்க அமெரிக்க உதவியோடு அரசு போராடி வருகிறது. பொலிவியாவின் அதிபரும், வெனிசுலாவின் அதிபரும் இணைந்து தங்களது கொள்கைகளையும், திட்டங்களையும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்து இடதுசாரிகளுக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்கள். இனி வரும் சில ஆண்டுகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதுமே இடதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது உறுதியாகி விட்டது. இந்த மாற்றம் உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக அமெரிக்கா சற்று எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறது. சில நாடுகள், இடதுசாரிகளாக இருந்தாலும் கூட, அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா பலவிதமான கடனுதவிகளை அளிப்பதோடு, தடையிலா வர்த்தகமும் செய்கிறது. இந்த நாடுகள் இடதுசாரித் தலைவர்களைக் கொண்டிருந்தாலும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கின்றன. எனினும் பொலிவியாவும், வெனிசுலாவும் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. ஏற்கனவே கோகா பயிரிடுவது சட்டப+ர்வமாக்கப்படும் என அறிவித்து பொலிவியா தனது அமெரிக்க எதிர்ப்பை காட்டியது.ஆனால் தற்போது பதவியிலிருக்கும் அல்லது வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் எல்லா இடதுசாரி ஆட்சியாளர்களும் ஒரே மாதிரியான கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்டவர்களாக கருத முடியாது. பிரேசிலிலும் அர்ஜெண்டினாவிலும் உள்ள இடதுசாரி ஆட்சியாளர்கள், சாவேஸ் போன்று மிகத் தீவிரமான பொதுவுடமைவாதிகளாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் செயல்படுகிறார்கள். புதிதாக பதவியேற்கும் இடதுசாரிகள் முதலில் சமாளிக்க வேண்டியது அமெரிக்க அரசின் நேரடி மற்றும் மறைமுகமான நெருக்கடிகளைத்தான். அது மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் பல பிரச்சனைகள் உள்ளன. சமூக கலவரங்களும், ஆள் கடத்தலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக பிரேசிலில் ஒரு நாளைக்கு 100 துப்பாக்கிச் சூடு இறப்புகள் நடக்கின்றன. போதை மருந்து கடத்தல் மிகப்பரவலாக நடைபெறுவது தேசங்களின் சமூக நலனைப் பாதி;க்கின்றன. பெண்ணுரிமை மறுக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகையான 55 கோடியில் சுமார் 22 கோடி பேர் இன்னமும் வறுமையில் வாழ்கிறார்கள். மேலும் 10 கோடி பேர் தினமும் ஒரு டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் தனி நபர் வருமானம் தொடர்ந்து எந்த வித அதிகரிப்பும் இல்லாமல் நிலையாகவே இருந்து வருகிறது. உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதத்தில் இது மிகவும் குறைவானதாகும். வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமான அளவில் காணப்படும் பகுதியாக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐ.நா.வின் 2005 வளர்ச்சி அறிக்கை கூறியுள்ளது. பிரேசிலின் சமூக ஏற்றத்தாழ்வுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். எண்ணை வளம் மிக்க வெனிசுலாவின் பெட்ரோலிய ஏற்றுமதியில் மிகப்பெருமளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிய+பாவிற்கு குறைந்த விலையில் பெட்ரோலியம் விற்கப்படுகிறது. சாவேஸ் தனது செல்வாக்கையும், பொதுவுடமைக் கருத்துக்களையும் நிலைநிறுத்துவதற்காக பெட்ரோலிய ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் மிகப்பெருமளவு பணத்தை லத்தீன் அமெரிக்க நாடுகளில் செலவு செய்கிறார். எனினும் ஏகாதிபத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி லத்தீன் அமெரிக்கா முழுவதும் சிவப்புக்கொடி எவ்வளவு நாள் பறக்கும் என்பதை புதிய ஆட்சியாளர்களின் திறமையான ஆட்சி தான் முடிவு செய்யும்.

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!